ஒவ்வொருவருடமும் புனிதரமழான்மாதத்தின் கடைசிப்பத்து நாட்களில் இஹ்திகாப் அணுஷ்டிக்கப்படுகின்றது.இவ் அமலை முஸ்லிம்களிக்கு தனியாகவோ அல்லதுகூட்டாகவோமேற்கொள்ளமுடியும்.இவ்வகையில் கூட்டு இஹ்திகாப் நிறைவேற்றப்படும் இடங்களில் மிகமுக்கிய இடங்களாக புனிதமக்காநகரின் மஸ்ஜிதுல்ஹரம் பள்ளிவாசலும்,புனித மதீனாநகரின்மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசலும் உள்ளன.கூட்டு இஹ்திகாபானது ரஸூல்(ஸல்)அவர்களின் ஒருஸூன்னாவாகக் காணப்படுகின்றது. இதனை மேற்கொள்வதனால் பலவெகுமதிகளும், நன்மைகளும் கிடைக்கின்றன. ரஸூல்(ஸல்) அவர்கள், ஸஹாபாக்களுடன்புனிதமஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசலில் கூட்டாக இஹ்திகாப் அமலை மேற்கொண்டார்கள்.இவ்அமலினால் ரஸூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஸஹாபாக்கள் ஒப்பற்ற ஆத்மீக பக்குவத்தை பெற்றார்கள்.
புனிதமக்கா நகரின் மஸ்ஜிதுல்ஹரம்பள்ளிவாசலும், புனிதமதீனா நகரின் மஸ்ஜிதுன் நபவிபள்ளிவாசலும் உலகின் மிகப்பெரிய இஹ்திகாப் நகரங்களாக விளங்குகின்றது. இரண்டு புனித தளங்களையும் அடுத்து மிகக்கூடுதலானோர் ஒன்றுகூடுகின்ற இஹ்திகாப்நகரம் பாகிஸ்தானின் லாகூர்நகரில் அமைந்துள்ளது. உலகப்புகழ்பெற்ற சமகால இஸ்லாமிய அறிஞரும்,மின்ஹாஜூல்குர்ஆன் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் கலாநிதி தாஹிர்உல் காதிரி தலமையில் ரமழான்மாதத்தின் கடைசிப் பத்துநாட்களில் இஹ்திகாப் நகரம்கூடுகிறது. பாகிஸ்தானிலிருந்து மாத்திரமன்றி உலகின்பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானமக்கள் இஹ்திகாபில் பங்கேற்கும் நோக்குடன் இஹ்திகாப்நகருக்கு வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.
0 Comments