2011 ஆண்டின் அமெரிக்காவின் 12 பெரிய பொய்கள்.






2011ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் வெளியுலகுக்கு கூறிய பெரும்
பொய்களை அமெரிக்காவின் பிரபல செய்திச்சஞ்சிகையான Foreign Policy வெளியிட்டுள்ளது.ஒபாமா நிர்வாகம் தனது ஆட்சியைத்தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலேயேபெரும் பொய்களை கூறியதாக அக்கட்டுரையை எழுதிய அரசியல் ஆய்வாளரான டேவிட் K ரோத்கெப்ட் தெரிவித்துள்ளார். இவற்றில் கூடுதலானவைகள் வெளிநாடுகள் பற்றியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டின் அமெரிக்காவின் பெரும் 12பொய்கள் ஒழுங்குமுறையில் கீழே தரப்பட்டுள்ளது.


1."ஈராக்போர் 9வருடங்களின் பின்னர் நிறைவடைந்துவந்துள்ளது."


அமெரிக்காவுக்கும்,ஈராக்குக்கும் இடையில் 1990ஆம் ஆண்டுமுதல் பாதுகாப்பு ஒப்பந்தம் இருந்துவந்தது.இதனை நோக்கும் போது இன்னும் பலவுரடங்களுக்குமத்தியகிழக்குப் பகுதியை அமெரிக்கா போரை நடத்தும் கொள்கையைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றது.


2."ஈராக்கில் அமெரிக்காவின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது."


அமெரிக்காவின் சில நடவடிக்கைளால் ஈராக் பிளலுபடுத்தப்பட்டுள்ளது,
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன,ஊழல்கள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்கா இதுவரை ஈராக்குக்காக ஒருடிரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும்அதிகமாக செலவளித்துள்ளது,ஆயிரக்கணக்கான அமெரிக்கப்படை வீரர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்,பலநூறு ஆயிரக்கணக்கான ஈராக்கிய பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தால் கொள்ளப்பட்டுள்ளது.ஈராக் போரில்அமெரிக்கா உண்மையாகவே பாரிய தோள்வியடைந்துள்ளது.


3."ஆப்கானிஸ்தானில் நாங்கள் வெற்றியடைந்து வருகின்றோம்."


இக்கூற்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளரால் கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தீவிர நடவடிக்கைளில் அமெரிக்கா ஈடுபட்ட வருவதுடன்,பாகிஸ்தானின் அணுத்திட்டங்களுக்கும் அமெரிக்கா அச்சுறுத்தலாக விளங்குகின்றது.

4."பாகிஸ்தான் அமெரிக்காவின் நட்பு நாடு, ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின்பங்காளர்."

 பாகிஸ்தானின் அல்லது ஆப்கானிஸ்தானின் நம்பத்தகுந்த வட்டாரங்கள்இப்படித்தெரிவிக்கவில்லை.உலக அரங்கில் பாகிஸ்தான் மற்றும்ஆப்கானிஸ்தானிடம் அமெரிக்க சிறுமைப்படுத்தப்படாமல் இருப்பதற்காகவே இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.


5."சீனாவின் வளாச்சி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமையாது."


 இது உண்மையாக அமைய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலரி கிளின்டன் தனது பிரர்த்தனையில் வேண்டியதாக,இக்கட்டுரை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.




6. "குடியரசுவாதிகளாலும் பிரச்சினை,ஜனநாயகவாதிகளாலும் பிரச்சினை.."


 அமெரிக்கா அரசாங்கத்துக்கு அரசியல் குழுக்களால் ஒரு பிரச்சினையும்
 இல்லை.மாறாக பணம் இல்லாமையே பிரச்சினையாகும்.


7. "மில்லியன் கணக்கான மக்களுக்கு தொழில் வழங்குவதற்காகவே
    வரி வசூலிக்கப்படுகின்றது."
  
 இம் முட்டாள்தனமான திட்டத்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு ஆதாரமாவது முன்வைக்கப்படவில்லை.


8."அடுத்த மகாநாடு ஐரோப்பியத் தலைவர்கள் எழுந்துநிற்கும்  மகாநாடாகஅமையும்."


 இது வெறுப்படையச்செய்த ஒரு விடயமாகும்.ஏனெனில் அமெரிக்கா 
 பொருளாதாரச் சந்தை இன்னும் பாரிய நிதிநெருக்கடியில் உள்ளது.



9."ஒபாமா நிர்வாகம் நிர்வாகம் நிதிச் சேவைகளில் கடுமையான திருத்தங்களைகொண்டுவர குழுவொன்றை நியமித்துள்ளது."


2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நிதிநெருக்கடியிலிருந்து இன்னும் அமெரிக்கா மீளவில்லை.


10. "9வீதமான அமெரிக்கர்களே காங்கிரஸை அங்கீகரித்துள்ளனர்."




11."லிபியாவின் மீதான இராணுவநடவடிக்கைகள் சிலநாட்களில்     அல்லதுசிலவாரங்களில் முடிவடையும்."


 லிபியாவின் மீதான இராணுவநடவடிக்கைள் பிழையான அணுகுமறையாகும்.இது பல மாதக்கணக்கில் நீடித்தது.


12. "நான் இஸ்ரேலுடன் அன்பு வைக்கின்றேன்".


 இப்படியான கூற்றொன்றை அமெரிக்க அரசியலில் ஈடுபட்டுள்ள உள்ள எவரும் இதனை உறுதியாகக் கூறவில்லை.அப்படியாக ஒருவரும் எண்ணவுமில்லை.எனினும் " வாக்குகளைப் பெறவும்,பணங்களை பெறவும் நான் அமெரிக்க யூதனாக வேண்டியதுடன்,இஸ்ரேலின் மீது அன்புவைப்பவனாகவும் நினைக்கவேண்டும்". என்பதே அவர்களின் எண்ணமாகும் என இக்கட்டுரையின்ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments