புனித ரமழனை முன்னிட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் 1598 கைதிகளுக்கு மன்னிப்பு

புனித ரமழானை முன்னிட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் மொத்தமாக 1598 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். அபூதாபியில் வெவ்வேறு குற்றச்செயல்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 973 கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி
செய்க் கலீபா பின் ஸைத் அல்நைகான் உத்தரவிட்டுள்ளார். மேலும் துபாயில் உள்ள 625 கைதிகளை விடுதலை செய்யும்படி பிரதமர் செய்க் மக்தூம் உத்தரவு பிறப்பித்துள்ளார். கைதிகள் விரைவாக விடுவிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments